திருஷ்டகேது

திருஷ்டகேது (DHRISTAKETU) சேதி நாட்டு மன்னர் சிசுபாலனின் மகனாவார். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், திருஷ்டகேது சேதி நாட்டிற்கு மன்னராகி பாண்டவர்களின் நண்பரானர். திருஷ்டகேதுவின் சகோதரியை நகுலன் மணந்து கொண்டார்.[1]

குருச்சேத்திரப் போரில் ஒரு அக்குரோணி படைகளுடன் பாண்டவர் அணியில் இணைந்து, கௌரவர்களுக்கு எதிராக போரிட்டவர். இறுதியில் துரோணரால் கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்

  1. உத்யோக பர்வம் பகுதி 19