அகிலாவதி

அகிலாவதி மகாபாரதக் காதாபாத்திரங்களில் ஒருவராவார். இவள் ஒரு நாக கன்னிகை. பீமனின் மகனான கடோற்கஜனைத் திருமணம் செய்தாள். அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்குப் பதிலளித்தே அவளைக் கடோற்கஜன் மணம் புரிந்தான்.[1]

அகிலாவதியின் மகனே பார்பரிகா. பார்பரிகாவுக்கு இவள் தோற்கும் பக்கத்துடன் சேர்ந்து போரிடப் பழக்கினாள். பார்பரிகா பாரதப்போரின் பதினான்காம் நாளில் கௌரவருடன் இணைந்து போரிடத் தொடங்கி பீமன், காடோற்கஜன், அருச்சுனன் ஆகியோரையும் வென்றான். கிருஷ்ணனால் கொல்லப்பட்டான்.


மேற்கோள்கள்

  1. Bandyopadhyay, Indrajit (2013). Mahabharata Folk Variations (in ஆங்கிலம்). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781105320767. பார்க்கப்பட்ட நாள் 8 September 2018.