தேனி (Theni) அல்லது தேனி அல்லிநகரம் (Theni Allinagaram) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்பு நிலை நகராட்சிகள் ஆகும். தேனி நகரம் முந்தைய மதுரை மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
இந்நகரமானது மாநிலத்தின் தலைநகரான சென்னையிலிருந்து 506 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 77 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்நகரம் தேனி, அல்லி நகரம், பொம்மைய கவுண்டன் பட்டி, கருவேல் நாயக்கன் பட்டி எனும் ஊர்களை உள்ளடக்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில், இந்த ஊர்களின் வருவாய் கிராமம் அல்லி நகரம் எனும் பெயரில் இருந்ததால் இந்நகர் உள்ளாட்சி அமைப்பில் தேனி-அல்லி நகரம் நகராட்சி என்கிற பெயரில் 1964 ஆம் ஆண்டில் மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்நகராட்சி தமிழ்நாடு அரசு ஆணை (G.O. No. 194, date: 10. பெப்ரவரி 1972) மூலம் இரண்டாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழ் நாடு அரசு ஆணை (G.O. No. 851, date: 9. மே 1983) மூலம் முதல் நிலை நகராட்சியாகத் தரமுயர்த்தப்பட்டது. தற்போது 2023 இந்நகராட்சி சிறப்புநிலை நகராட்சியாக முன்னேற்றமடைந்துள்ளது.
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி தேனியின் மொத்த மக்கள் தொகை 94,453 ஆகும். இவர்களில் 47,244 ஆண்கள். 47,209 பெண்கள் ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929-யை விட, மாநில சராசரியான 996-யை விட அதிகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் 9,138 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 85.86% உள்ளது. இதில் ஆண்களில் கல்வியறிவு பெற்றோர் 90.85% ஆகவும், பெண்களில் கல்வியறிவு பெற்றோர் 80.90% ஆகவுமாக உள்ளனர். தேனி நகரில் 25,371 வீடுகள் உள்ளன. தேனியின் புறநகர் பகுதிகளான பழனிசெட்டிபட்டி, பூதிபுரம், அரண்மனைப்புதூர், முல்லைநகர், அன்னஞ்சி, வடபுதுப்பட்டி போன்றவைகளை சேர்த்தால் மக்கள் தொகை 2 லட்சத்தை தாண்டும்.[1]
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள்95.04% ஆக இருக்கின்றனர். அதையடுத்து முஸ்லிம்கள் 3.18%, கிறிஸ்தவர்கள் 1.63%, சீக்கியர்கள் 0.02%, பௌத்தர்கள் 0.01%, மற்றவர்கள் 0.01%, மதம் குறிப்பிடாதவர் 0.12% ஆகவும் உள்ளனர்.[2]
தேனி மாவட்டம் தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்கு தொடர்ச்சிமலைகள் சூழ அமைந்த இயற்கை எழில்மிகு மாவட்டம் ஆகும். இது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் நிறைந்துள்ளது. வைகை அணை, சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, மேகமலை அணை உள்ளிட்ட ஆறுகளில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு சுருலி நீர்வீழ்ச்சி, கும்பக்கரை நீர்வீழ்ச்சி மற்றும் மேகமலை நீர்வீழ்ச்சி என பல பிரபலமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இது கொடைக்கானல், தேக்கடி, மேகமலை, மூணார், கும்பக்கரை, சோத்துப்பாறை மற்றும் வைகை அணை போன்ற பல சுற்றுலா தலங்களால் சூழப்பட்டுள்ளது. தேனியின் அழகிய சூழல் என்பதால், இது தமிழ் திரையுலகின் மிகவும் விரும்பப்படும் படப்பிடிப்பு இடங்களில் ஒன்றாகும். தேக்கடி வனவிலங்கு சரணாலயமானது, கேரளாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் எல்லையில் அமைந்துள்ளது.
வீரபாண்டி திருவிழா, தேனியில் வீரப்ப அய்யனார் கோயில் திருவிழா, தேவதானபட்டியில் காமாட்சி அம்மன் கோயில் திருவிழா மற்றும் குச்சனூரில் உள்ள சனீஸ்வரன் கோயில் திருவிழா ஆகியவை இம்மாவட்டத்தில் கொண்டாடப்படும், முக்கிய திருவிழாக்கள் ஆகும்.
தேனி - அல்லி நகரம் நகராட்சி 33 நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நகராட்சியின் தலைவர் பதவிக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்நகராட்சியின் நகரமன்றத் தலைவராக எஸ். முருகேசன் என்பவரும், 33 நிருவாகப் பிரிவுகளுக்கும், உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு செயற்பட்டு வருகிறார்.[சான்று தேவை]
ஒரு இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் உங்களைப் பெரிதும் கவர்ந்த ஊர்? என்கிற கேள்விக்கு கவிஞர் ஜெயபாஸ்கரன், “எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் தேனி மண் இலக்கியத்தால் மணக்கும். தேனியை தமிழ்நாட்டின் "இலக்கியத் தலைநகரம்' என்று ஒரு நேர்காணலில் பதில் அளித்திருக்கிறார்.
தேனியின் மையப்பகுதியில் தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குச் சொந்தமான காமராசர் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களிலும், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கம்பம், போடிநாயக்கனூர், கோட்டயம் ஆகிய ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துநிலையத்திற்கு அதிகமான பேருந்துகள் வந்து செல்வதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, தேனி புறவழிச்சாலையில் கட்டி முடிக்கப்பட்டது. 2014ம் வருடத்திலிருந்து இப்புதிய பேருந்து நிலையம், 'கர்னல் பென்னிகுயிக் பேருந்து நிலையம்' என்ற பெயரில் இயங்கி வருகிறது.
மதுரையிலிருந்து .- போடிநாயக்கனூர் செல்லும் தொடருந்துப் பாதையில் தேனி தொடர்வண்டி நிலையம் அமைந்துள்ளது. இந்தத் தொடருந்து நிலையத்திற்கு மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் செல்லும் பயணிகள் தொடருந்து காலையிலும், இந்தப் பயணிகள் தொடருந்து மாலையில் போடிநாயக்கனூரிலிருந்து மதுரைக்குத் திரும்பிச் செல்லும் போதும் நின்று செல்கிறது. இந்தத் தொடருந்து நிலையம் தவிர தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிறுத்தப் பகுதியிலும், இந்தத் தொடருந்து நிறுத்தப்படுகிறது. இந்தத் தொடருந்து வாரவிடுமுறை நாளான, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுவதில்லை.
இங்கிருந்து 77 கி.மீ தொலைவிலுள்ள மதுரை வானூர்தி நிலையம், அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்.
தேனி-அல்லிநகரம் நகராட்சியில், கீழ்காணும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கீழ்காணும் உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன.
இங்கு இந்து சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காகப் பல கோயில்கள் இருப்பினும் கீழ்காணும் கோயில்கள் சிறப்புடன் விளங்குகின்றன.
இங்கு கிறித்துவ சமயம் சார்ந்தவர்கள் வழிபாட்டிற்காக சில தேவாலயங்கள் உள்ளன. அவை:
இங்கு இசுலாமிய சமயம் சார்ந்தவர்கள் தொழுகை நடத்துவதற்காக சில பள்ளிவாசல்கள் உள்ளன. அவை:
ஆண்டிபட்டி · போ. மீனாட்சிபுரம் · பூதிப்புரம் · தேவதானப்பட்டி · கெங்குவார்பட்டி · அனுமந்தன்பட்டி · ஹைவேவிஸ் · காமயக்கவுண்டன்பட்டி · கோம்பை · குச்சனூர் · மார்க்கையன்கோட்டை · மேலச்சொக்கநாதபுரம் · ஓடைப்பட்டி · பழனிசெட்டிபட்டி · பண்ணைப்புரம் · சி. புதுப்பட்டி · தாமரைக்குளம் · தென்கரை (தேனி) · தேவாரம் (தேனி) · உத்தமபாளையம் · வீரபாண்டி (தேனி)