விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி (Wijayaratnam Hindu Central College) இலங்கையின் மேல் மாகாணம் கம்பகா மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு இந்துத் தமிழ்ப் பாடசாலை ஆகும். இப்பாடசாலை ச.க. விஜயரத்தினம் என்பவரால் 1932ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாள் நீர்கொழும்பு வாழ் தமிழர்களுக்காக நிறுவப்பட்டது. மாணவர்கள் தமிழ் மொழியூடாகக் கற்கைகளை மேற்கொள்ளக் கூடிய வசதிகள் உண்டு. தனியாக ஒரு கணினி ஆய்வுகூடமும், நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம் போன்ற வசதிகள் உண்டு.[1]
1954 அக்டோபர் 7 விஜயதசமி அன்று 32 மாணவர்களுடனும் இரு ஆசிரியர்களுடனும் விவேகானந்தா வித்தியாலம் என்ற பெயரில் இப்பாடசாலை உருவானது. 1960 டிசம்பர் மாதத்தில் இவ்வித்தியாலயத்தை அரசாங்கம் பொறுப்பேற்ற பின், 1964 பெப்ரவரி முதலாம் தேதி, நீர்கொழும்பு விவேகானந்தா மகா வித்தியாலம் என்ற பெயரில் மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது. 1964 ஆகத்து/ நவம்பர் மாதங்களுக்கிடையில் இப் பாடசாலையின் பெயர் விஐயரத்தினம் மகா வித்தியாலயம் என மாற்றம் பெற்றது. 1972 ஆம் ஆண்டில் பழைய மாணவர் சங்கம் அமைக்கப்பட்டது. 1994 ல் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றது. 1995 சூலை 13 அன்று இக்கல்லூரியில் ஞானவிநாயகர் ஆலயம் குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனைக் கல்லூரியின் விஜயசக்தி இந்து மாமன்றத்தினர் பராமரித்து வருகின்றனர்.
மாணவர்கள் "திருகேதீஸ்வரம்", "கோணேஸ்வரம்", "நகுலேஸ்வரம்", "முன்னேஸ்வரம்" என நான்கு இல்லங்களில் பிரிக்கப்பட்டுள்ளனர்.