முருகேசபுரம் ஐந்து வீட்டு சாமி கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், முருகேசபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
இக்கோயிலில் ஐந்துவீட்டுசாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் ஏடுவாசித்தல் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.