நெடுங்குளம் நித்யமணவாளநாதசாமி கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், நெடுங்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]
இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
இக்கோயிலில் நித்யமணவாளநாதசாமி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது.