2022 பப்புவா நியூ கினி நிலநடுக்கம் (2022 Papua New Guinea earthquake) 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று உள்ளூர் நேரப்படி காலை 9:46 மணிக்கு பப்புவா நியூ கினியில் 7.6 அல்லது 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.[1][2][3] அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உயிரிழப்பு மற்றும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கம் உந்தத்திறன் ஒப்பளவு அளவில் 7.6 ஆக இருந்தது. 90.0 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்திருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறுகிறது.[4] இதற்கிடையில், புவிவாய்ப்பு என்கிற அமைப்பு நிலநடுக்க அளவு 7.7 என்றும் 39 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தது என்றும் அளவிட்டுள்ளது. புவியின் இடை ஆழத்தில் மேற்கு வடமேற்கு-கிழக்கு தென்கிழக்கு மோதல் அல்லது வடக்கு-வடகிழக்கு தள மூழ்கல் அல்லது கிழக்கு-மேற்கு தாக்கம் மற்றும் தெற்கு தளம் அமிழ்தல் போன்ற காரணங்கள் ஒன்றின் விளைவாகும்.[5]
நிலநடுக்கம் ஏற்பட்ட மையத்தைச் சுற்றியுள்ள 1000 கிலோமீட்டர் சுற்றளவில் பப்புவா நியூ கினியா மற்றும் இந்தோனேசியா கடற்கரை பகுதிகளில் சுனாமி அச்சுறுத்தல் செய்தியை பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிட்டது.[6] சுனாமி அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாக பிறகு இம்மையம் அறிவித்தது.[7]
சில உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் சந்தேகிக்கிறது.[8]