ஏ. ஆர். சுப்பையா முதலியார் ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சங்கரன்கோவில் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தென்காசி தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராகவும் மற்றும் 1967 ஆம் ஆண்டு தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1971ஆம் ஆண்டு தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு கடையநல்லூர் தொகுதியில் இருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்